வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

அனைத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:07 am IST

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு கொண்டு வரும் சாலை பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆக. 7 ஆம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் வண்ணார்பேட்டையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, தொமுச அமைப்புச் செயலர் அ. தர்மன் தலைமை வகித்தார்.  சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பெருமாள்,  ஏஐடியூசி ஆர். ராதாகிருஷ்ணன், தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில்,  ஆக. 7 ஆம் தேதி நடைபெறவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது;  போராட்டம் குறித்து வாயிற்கூட்டம்,  மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது;  ஆக. 7 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம் அருகில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.