காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கண்களில் கருப்புத் துணி கட்டி அஞ்சல் ஊழியர்கள் போராட்டம்

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
Updated On :5 ஜூன் 2018, 12:04 am

DIN

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் கண்களில் கருப்புத் துணியைக் கட்டிக்கொண்டு, பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் நிலையம் முன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில், அஞ்சல் துறையில் புள்ளி அடிப்படையில்ஊதியம் நிர்ணயிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும்; 31.12.2015 ஊதியத்தை 2.57 மடங்காக பெருக்கி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்; 12, 24, 26 சேவை காலங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்; ஜி.டி.எஸ். பெண் ஊழியர்களுக்கு 26 வாரம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்; 180 நாள்கள் வரை ஈட்டிய விடுப்பு சேமிக்க வாய்ப்பளிக்க வேண்டும்; பணிக்கொடையை ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்' என்பன உள்ளிட்ட கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரையை அஞ்சல் துறை நிர்வாகம் அமல்படுத்தக் கோரி கடந்த 12 நாள்களாக கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்ஒரு பகுதியாக பாளையங்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் முன், கண்களில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.