வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காப்பீடு ஊழியர் சங்க வெள்ளிவிழா: மாநாட்டு இலச்சினை வெளியீடு

பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :29 மார்ச் 2018, 1:55 am

பாளையங்கோட்டையில் காப்பீடு ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
 திருநெல்வேலி கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் வெள்ளிவிழா மாநாடு  ஆக. 3,4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதையொட்டி, மாநாட்டின் இலச்சினை வெளியிடும் நிகழ்ச்சி பாளையங்கோட்டை காப்பீடு நிறுவன கோட்ட அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
  அமைப்பின் தலைவர் ஆர். மதுபால் தலைமை வகித்தார். அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ். ராமச்சந்திரன், இலச்சினை வெளியிட,  முன்னாள் பொதுச்செயலர் எஸ். சிவசங்கரசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
மாநாட்டு நிகழ்வுகளை அமைப்பின் முன்னாள் பொதுச்செயலர் டி. தேவபிரகாஷ், தொடங்கி வைத்துப் பேசினார். ஆயுள் காப்பீடு கழக முதுநிலை கோட்ட மேலாளர் கே. வசந்த்குமார் வாழ்த்திப் பேசினார். 
கோட்டப் பொதுச்செயலர் சி. முத்துக்குமாரசாமி வரவேற்றார். இணைச் செயலர் என். பொன்னையா நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.