திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் உதவியுடன் 14 சுகாதார மையங்களில் விழித்திரை நோய் கண்டறியும் திட்டத்தின் கீழ் நவீன சிகிச்சைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மகாராணி எலிசபெத் வைரவிழா டிரஸ்ட், இந்திய மக்கள் அடிப்படை சுகாதார இயக்ககம், அரவிந்த் கண் மருத்துவமனை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 2016-18 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயாளிகளில் காணப்படும் விழித்திரை நோய் கண்டறியும் திட்டம் 14 சுகாதார மையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரவிந்த் கண் மருத்துவமனையின் கண்காணிப்பில் செயல்பட்ட இத்திட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவின்கீழ் செயல்படுத்துவதற்கான அறிமுக நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எம்.கண்ணன் நிகழ்ச்சியில் பேசியது: இந்தியாவில் சுமார் 6 கோடி மக்கள் நீரிழிவு நோயினால் ஏற்படும் விழித்திரை பாதிப்பால் அவதிப்படுகிறார்கள். பல்வேறு ஆய்வுகளின் கீழ் 12 முதல் 18 சதவிகித நீரிழிவு நோயாளிகள் பார்வைக் குறைபாடு அடைவது தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் விழித்திரையில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து ரத்தக்கசிவு ஏற்படுவதால் விழித்திரை பாதிக்கப்படும். ஆனால், இதுபோன்ற பார்வையிழப்பை தடுக்க வழிமுறைகள் உள்ளன. இந்தப் புதிய திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை படம் அதிநவீன கேமரா மூலம் எடுக்கப்பட்டு அவை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு மருத்துவர்கள் அவற்றை பார்த்துவிட்டு நோயின் தீவிரம், ஆலோசனைகள், மருந்துகளை பரிந்துரைப்பார்கள். உயர் சிகிச்சை தேவைப்படுவோர் கண் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவார்கள். ஆகவே, கிராமப்புற மக்கள் இத் திட்டத்தைப் பயன்படுத்தி சிறந்த கண் சிகிச்சையைப் பெறலாம் என்றார் அவர்.
அரவிந்த் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் ஆர்.ராமகிருஷ்ணன், மருத்துவக் கல்லூரி கண் சிகிச்சை பிரிவு மருத்துவர் ராமலட்சுமி, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

