வி.கே.புதூர் அருகேயுள்ள குறிஞ்சாகுளத்தைச் சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆட்சியர்அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குறிஞ்சாகுளம் மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
மருதப்பபுரம் ஊராட்சிக்குள்பட்ட குறிஞ்சாகுளம் குறிஞ்சிநகர், இந்திரா நகர், காளியம்மன் கோயில் தெரு, கிழக்கு காலனி ஆகிய பகுதியில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் தொட்டி இருக்கிறது. ஆனால் குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து மருதப்பபுரம் ஊராட்சியில் முறையிட்டால், கிணற்றிலும், ஆழ்துளை கிணற்றிலும் தண்ணீர் இல்லை என கூறிவிட்டனர். அதன்பிறகு ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்ததன் எதிரொலியாக குறிஞ்சி நகர் பகுதியில் ஒரு குடிநீர் குழாய் அமைத்தார்கள். அதிலும் போதிய அளவில் தண்ணீர் வரவில்லை.
காளியம்மன் கோயில் தெருவில் உள்ள கிணறு சுற்றுச் சுவரின்றி ஆபத்தான நிலையில் உள்ளது. அந்தக் கிணற்றில் உள்ள மோட்டாரும் செயல்படாமல் உள்ளது. எனவே புதிய மோட்டாரை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒடிசா கடற்கரையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கிலம்!
லக்னௌ வீரர் ஹசரங்கா விலகல்! மாற்றுவீரர் யார் தெரியுமா?

”முதல்வர் கனவு! MLA ஆவதே சந்தேகம்தான்!..!” விஜய் குறித்து பியூஷ் கோயல் | TVK | NDA

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

