பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும்


திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, ஆர்.மோகன் மற்றும் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் பரவி வருகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளிகள் அனுமதிச் சீட்டு தரும் இடத்தில் காய்ச்சல் நோயாளிகளுக்கு தனியாக கவுன்ட்டர் ஏற்படுத்த வேண்டும். பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல் நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி செய்து தர வேண்டும். மருந்து, மாத்திரைகளை தர கூடுதல் மருந்தாளுநர்களை நியமிக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உத்தரவாதப்படுத்த வேண்டும். காய்ச்சல் தடுப்பு மாத்திரைகளை ஆரம்ப சுகாதார மையங்களில் போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். சித்த மற்றும் ஹோமியோ மருந்துகளையும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை மாவட்டம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பது குறித்து கூடுதல் பயிற்சி அளிக்க வேண்டும். நோய் பரப்பும் கொசுக்களை ஒழிக்க கொசு மருந்து அடிக்கும் ஏற்பாடுகளை உள்ளாட்சிகள் மூலம் மேற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...