சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தாமிரவருணி ஆரத்தி பாடல் வெளியீடு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:59 am

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடு ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
தாமிரவருணி மஹா புஷ்கர விழாவையொட்டி திருநெல்வேலி கைலாசபுரத்தில் உள்ள தைப்பூச மண்டப படித்துறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரத்தி பூஜை நடைபெற்றது. 
வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரியார் சுவாமிகள், வேலூர் பொற்கோயில் சக்திபீடம் நாராயணி அம்மா, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் நிரம்பவழகிய தேசிக ஞானப்பிரகாச சுவாமிகள், தருமை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், மீனாட்சி சுந்தர தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் பங்கேற்றனர்.
முன்னதாக தாமிரவருணி ஆரத்தி பாடல் குறுந்தகடும், நவீன தாமிரபரணி மகாத்மியம் என்ற நூலும் வெளியிடப்பட்டது. திருமுறை கலாநிதி திருத்தணி சுவாமிநாதன், மயிலம் பொம்மபுர ஆதீனம் திருப்பாதிரி புலியூர் ஞானியார் மடம் சுவாமிகள், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன், ஓய்வுபெற்ற ஐ.ஜி. மாசானமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.