பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி, ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலயத் திருவிழா கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட முதன்மை குரு கில்லாரியுஸ் தலைமை வகித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை தியானம் நடைபெற்றது. இம் மாதம் 7 ஆம் தேதி மாலையில் நற்கருணை பெருவிழாவும், 8 ஆம் தேதி அன்னையின் பிறந்த நாள் பெருவிழாவும், இரவு 7 மணிக்கு அசன விருந்தும் நடைபெற உள்ளது. 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் நன்றியின் பெருவிழாவில் பேராயர் அந்தோனி பாப்புசாமி பங்கேற்கிறார். 15 ஆம் தேதி ரெட்டியார்பட்டியில் உள்ள வேளைநகர் தோட்டத்தில் தாய்மையின் திருவிழா நடைபெற உள்ளது.
விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ம.அருள்அம்புரோசு, உதவிப் பங்குத்தந்தை கு.ஜேக்கப் அமல ப்ரினீத் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!

மமதா தோல்வி அடையப்போகும் விரக்தியில் உள்ளார்: சுவேந்து அதிகாரி

ரியான் பராக், டோனோவன் ஃபெரைரா அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 226 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

