தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மூணாறு நிலச்சரிவில் பலியான தொழிலாளர்களுக்கு மாஞ்சோலையில் அஞ்சலி

​மூணாறு ராஜாமலைப் பகுதியில் நிலச்சரிவில் பலியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
மூணாறில் பலியான தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள்
Updated On :12 ஆகஸ்ட் 2020, 3:03 pm

DIN


மூணாறு ராஜாமலைப் பகுதியில் நிலச்சரிவில் பலியான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கேரள மாநிலம் மூணாறு, ராஜாமலை, பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஆக. 6 வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பலியாகினர். 

நிலச்சரிவில் பலியான தோட்டத் தொழிலாளர்களுக்கு மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் சார்பில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. பெட்டிமுடித் தோட்டத்தில் பலியானவர்களின் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். 

நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு பலியான தொழிலாளர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அ.விமல் அலெக்ஸ், ரா.சீலன் மற்றும் நண்பர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.