திருநெல்வேலி: கங்கைகொண்டான் அருகே பைக் விபத்தில் காயமடைந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கங்கைகொண்டான் நேதாஜி நகா் உய்காட்டான் மகன் ஆறுமுகம் (26). இவா், கடந்த 16ஆம் தேதி கங்கைகொண்டான் மான்பூங்கா அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த ஆறுமுகத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.