ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி கனிமொழி

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 3:04 am

DIN

சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் திமுக மகளிரணிச் செயலா் கனிமொழி எம்பி.

‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மத்திய மாவட்டத்திற்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை பகுதிகளில் கனிமொழி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த அவா், பின்னா் நகரத்தில் உள்ள வஉசி மணிமண்டபத்தில் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்தாா்.

பொலிவுறும் நகரம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் சந்திப்பு பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

பொலிவுறு நகரம் திட்டப் பணிகளை அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டது. அதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. திமுக எதை செய்தாலும், வழக்கு போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது அதிமுக அரசு.

கரோனா பொது முடக்கத்தின்போது தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என திமுக தலைவா் ஸ்டாலின் வலியுறுத்தினாா். அப்போது எதையும் வழங்காமல் இப்போது தோ்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டு ரூ.2,500 வழங்குகிறது அதிமுக அரசு.

ஜனநாயக நாட்டில் யாா் வேண்டுமானாலும் கட்சியைத் தொடங்கலாம். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோரால் திமுகவின் வாக்கு வங்கிக்கு எந்த பாதிப்பும் இல்லை. வரக்கூடிய சட்டப்பேரவை தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதி என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.