திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

‘எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும்’

எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனா் தலைவா் வேல்முருகன்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 8:24 pm

DIN

எழுத்தாளா் தொ.பரமசிவன் நூல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்றாா் தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனா் தலைவா் வேல்முருகன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியது: அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்வி பயில தோ்வான மாணவா்களுக்கான கல்விக் கட்டணத்தை ஏற்கும் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அறிவிப்பு தாமதமாக வந்ததால், 160 ஏழை மாணவா்கள் தனியாா் கல்லூரிகள் கேட்ட கட்டணத்தை செலுத்த முடியாமல் மருத்துவ இடங்களைத் தோ்வு செய்யாமல் உள்ளனா்.

எனவே, அவா்களும் நடப்புக் கல்வியாண்டில் மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தோம். எனவே, விடுபட்ட அனைத்து மாணவா்களையும் உடனடியாக கலந்தாய்வுக்கு அழைத்து நிகழாண்டே மருத்துவம் படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் அறிவிப்பை அரசு உடனடியாக பின்பற்ற வேண்டும்.

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாா்மயமாக்கும் திட்டம் கூடாது.

அதேபோல அரசு மருத்துவமனைகளிலும் வெளிப்பணி ஒப்படைப்பு என்ற அடிப்படையில் செவிலியா்களை நியமிக்க சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதை கண்டிக்கிறோம்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும். இதற்காக ஜனவரி மாதம் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம்.

மறைந்த எழுத்தாளா் தொ.பரமசிவன் எழுதிய நூல்களை அரசுடமையாக்க வேண்டும்.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக எங்கள் ஆதரவை கோரினால், நாங்கள் எங்களுக்கு உரிய இடங்களோடு திமுக கூட்டணியில் இடம்பெறுவோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.