கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மனித உரிமை மீறல்! 19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

19 ஈரானிய அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது குறித்து...

News image

19 ஈரானிய அதிகாரிகள் மீது தடை விதிக்கும் ஐரோப்பிய ஒன்றியம்...

AP

Updated On :11 மார்ச் 2026, 2:53 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஈரானைச் சேர்ந்த 19 அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் புதிய தடைகளை விதிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஈரானில், கடந்த 2025 டிசம்பர் மாதம் முதல் நடைபெற்ற மாபெரும் போராட்டங்களில் போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பல கடுமையான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்த நிலையில், கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட 19 அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவனங்கள் மீது புதிய தடைகளை விதிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு அதிகாரி காஜா கல்லாஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஒடுக்குமுறையின் மூலம் ஈரானின் எதிர்காலம் கட்டமைக்க முடியாது எனவும், இந்த நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நடைபெற்று வரும் நிலையில், ஐக்கிய ஒன்றியம் இந்த நடவடிக்கையை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.