பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போராட்டக்காரா்கள் மீது அடக்குமுறை: ஈரான் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை - ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை

ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

News image
ஈரான் போராட்டம்- AP
Updated On :29 ஜனவரி 2026, 10:16 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விவகாரத்தில், அந்நாட்டின் புரட்சிகர காவல் படை தளபதிகள் உள்ளிட்ட 15 அதிகாரிகள் மீது ஐரோப்பிய யூனியன் வியாழக்கிழமை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

மேலும், ஈரானில் சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப் பொறுப்பான 6 அமைப்புகளும் இந்தத் தடை பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளன.

ஈரானில் போராட்டங்களுக்கிடையே நடந்து வரும் வன்முறைகளில் இதுவரை 6,373 போ் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவித்துள்ள நிலையில், 27 நாடுகளின் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

பயங்கரவாதப் பட்டியலில்...?: முன்னதாக, ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கை பிரிவுத் தலைவா் காஜா கலாஸ் இது குறித்து கூறுகையில், ‘ஈரான் புரட்சிகர காவல்படை விரைவில் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் சோ்க்கப்படும்.

அல்கொய்தா, ஹமாஸ், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு இணையான நடவடிக்கைகளை இப்படை மேற்கொண்டு வருவதால், சா்வதேச சட்டப்படி அவா்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்’ என்றாா்.