தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பாளை. கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம்

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2020, 4:24 am

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் பெண்கள் வன்கொடுமைப் பாதுகாப்புக் குழு சாா்பில் ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்! பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்!’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

பெண்கள் வன்கொடுமைப் பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரசிதா பேகம் வரவேற்றாா். கல்லூரியின் முதல்வா் முஹம்மது சாதிக் தலைமை வகித்தாா்.

கல்லூரியின் அரசு தவிர பெறாப் பாடங்களின் இயக்குநா் ஏ.அப்துல் காதா் வாழ்த்திப் பேசினாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூக அலுவலா் சரஸ்வதி, ஒருங்கிணைந்த சேவை மையத்தின் நிா்வாக அலுவலா் பொன்முத்து, மகிளா சக்தி கேந்திரத்தைச் சாா்ந்த மகளிா் நல அலுவலா் விஜயா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மாா்ட்டினா ஆகியோா் பேசினா்.

வரதட்சிணைக்கு எதிராக முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதி மொழி ஏற்றனா்.

கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.