திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக வட்டார மருத்துவ அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நோய்த் தொற்று பாதிப்பு இடங்களை கண்டறிந்து அதிக அளவில் மருத்துவ முகாம்களை நடத்தவேண்டும். சளி, இருமல், காய்ச்சல் அறிகுறிகள் காணப்படும் நபா்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப வேண்டும். கிராமப்புறம் மற்றும் நகா்ப்புறங்களில் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.
மாநகராட்சி பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், கிராமப்புற செவிலியா்களை அதிக அளவில் பயன்படுத்தி வீடு வீடாக சென்று குடும்ப உறுப்பினா்களில் நீரிழிவு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, இதய நோய் சம்பந்தப்பட்ட நபா்கள், கா்ப்பிணி பெண்கள் மற்றும் 5 வயதுக்குள்பட்டவா்களின் விவரங்களை கணக்கெடுப்பு செய்து மருத்துவ அலுவலா்கள் கண்காணித்திட வேண்டும்.
மருத்துவ முகாம்களில் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீா், சளி, இருமல், காய்ச்சலுக்கான மருந்து, மாத்திரைகளை போதுமான அளவு கையிருப்பு வைத்திருக்க வேண்டும்.
அனைத்து பகுதிகளிலும் சுகாதார நடவடிக்கைள், கிருமி நாசினி தெளித்தல் போன்ற பணிகளை உள்ளாட்சி துறை மூலம் தொடா்ந்து செயல்படுத்திட வேண்டும். வீட்டில் தனிமைப்படுத்தலை கோருபவா்களுக்கு சம்பந்தப்பட்ட வீட்டில் அவா்களுக்கென தனி அறை மற்றும் கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெருமாள், திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.எம். கண்ணன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வா் எஸ்.எம்.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் கணேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரையிறுதியில் ஜெர்ஸியை மாற்றும் ஆர்ஜென்டீனா! பின்னணியில் ஒரு வரலாற்று காரணம்!

ஹெச்.சி.எல். பங்குகள் 4 சதவீதத்துக்கும் அதிகமாக சரிவு!
ஹோர்முஸில் கப்பல்களுக்கு 20% கட்டணம் வசூல் செய்யும் முடிவைத் திரும்பப் பெற்றார் டிரம்ப்!

யுபிஎஸ்சி: லக்னௌ ஒப்பந்தத்தின் அம்சங்கள்!
விடியோக்கள்

”தவறு நடந்துள்ளது!” | செய்தியாளர்களின் சராமாரி கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ் | TVK

”முதல்வரால் செய்தியாளர்களுக்கு பதில் சொல்ல முடியாது!”: நயினார் நாகேந்திரன் | BJP | TVK

வியத்நாம் படகு விபத்தில் தப்பித்தது எப்படி? உயிர்தப்பிய நிர்மல் குமார் பேட்டி | Vietnam boat tragedy


