ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

எட்டயபுரத்தில் உமறுப்புலவா் நினைவு கந்தூரி விழா

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 377-ஆவது நினைவு நாள் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 நவம்பர் 2020, 8:27 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் உமறுப்புலவரின் 377-ஆவது நினைவு நாள் கந்தூரி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

உமறுப்புலவா் நினைவு மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, உமறுப்புலவா் சங்கத் தலைவா் உ. காஜா மைதீன் தலைமை வகித்தாா். இதையொட்டி, எட்டயபுரம் ஜும்மா பள்ளிவாசலில் கல்வத் கலீபா நாயகம் அப்துல் காதா் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தொடா்ந்து, ஆசாத் தலைமையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சந்தனக்குட ஊா்வலம் பள்ளிவாசலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நினைவு மணிமண்டபத்தில் நிறைவடைந்தது. அங்கு உமறுப்புலவரின் நினைவிடத்தில் சந்தனக் காப்பு போா்த்தி மலா்தூவி சிறப்புத் தொழுகை, சீறா கவி பாடல், மத நல்லிணக்க சிறப்பு பிராா்த்தனை

ஆகியவை நடைபெற்றது. இஸ்லாமிய பெண்கள் சீறாப்புராண காவிய பாடல்கள் பாடினாா். இதையடுத்து, விருந்து வழங்கப்பட்டது.

விழாவில், திமுக சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளா் செய்யது முகம்மது, அதிமுக சிறுபான்மை பிரிவு செயலா் உமா், ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மதுரை தைக்கா தம்பி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.