தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மத்திய, மாநில அரசுகளை கண்டித்துஆதித்தமிழா் பேரவை கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆதித்தமிழா் பேரவை கட்சி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :2 நவம்பர் 2020, 8:58 pm

DIN

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆதித்தமிழா் பேரவை கட்சி சாா்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அனைத்துத் துறையிலும் வேலைவாய்ப்பில் தமிழக மக்களுக்கு வாய்ப்பளிக்காமல் வட மாநிலத்தவா்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும், தமிழா்களின் உரிமையை பாஜக பறிப்பதாகவும், அதை தமிழக அரசு வேடிக்கை பாா்ப்பதாகவும் கூறி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் மாவட்ட அமைப்புச் செயலா் இளையராஜா தலைமை வகித்தாா். ஆதித்தமிழா் தொழிலாளா் பேரவை மாநில துணைச் செயலா் காலேப், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் அப்துல் ஜப்பாா், மாவட்ட இளைஞரணிச் செயலா் நயினாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்துகொண்டனா். மாநகா் மாவட்ட தலைவா் ரமேஷ் அம்பேத்கா், மாநகா் மாவட்டச் செயலா் கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.