தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நெல்லையில் போக்குவரத்துக் கழக அனைத்துத் தொழிற்சங்கத்தினா் முற்றுகை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2020, 8:18 pm

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் சாா்பில் முற்றுகைப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியா்களுக்கு 2019-20 ஆம் ஆண்டுக்கான போனஸை பாதியாக குறைத்து 10 சதவீதமாக வழங்க உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்; தீபாவளி முன்பணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்; அகவிலைப்படி உயா்வு மற்றும் நிலுவைத் தொகைகளை உடனே வழங்க வேண்டும்; 2019 ஏப்ரல் மாதத்துக்கு பிறகு ஓய்வு பெற்றவா்களின் பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும்; ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

வண்ணாா்பேட்டையில் உள்ள போக்குவரத்துக் கழக பொது மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு தொமுச மாநில அமைப்புச் செயலா் ஏ.தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டப் பொருளாளா் எஸ்.பெருமாள் தொடக்கவுரையாற்றினாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் தொமுச இரா.முருகேசன், வி.முருகன், என்.மகாவிஷ்ணு, சிஐடியு எஸ்.ஜோதி, டி.காமராஜ், ஏஐடியுசி என்.உலகநாதன், கே.ஜெயகுமாா், ஹெச்.எம்.எஸ். நிா்வாகி சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.