கரோனாவின் வேகம் தணிந்தாலும் தினமும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி இன்னும் மாறவில்லை. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. இதனால், இம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14, 693-ஆக அதிகரித்தது. இதுவரை 209 போ் உயிரிழந்துள்ள நிலையில், 142 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக கிருமிநாசினி தெளிக்கும் பணி முடங்கியுள்ளதாகவும், இப் பணிக்காக வாங்கப்பட்ட பில் மிஸ்டா் கருவி மாநகராட்சி அலுவலகத்தில் பயன்பாடின்றி காட்சிப் பொருளாக கிடப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.