ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

தச்சமொழி கோயிலில் நவராத்திரி பூஜை தொடக்கம்

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொழு பூஜை சனிக்கிழமை தொடங்கியது.

News image
ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.
Updated On :18 அக்டோபர் 2020, 8:04 pm

DIN

சாத்தான்குளம் தச்சமொழி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி கொழு பூஜை சனிக்கிழமை தொடங்கியது.

நவராத்திரியை முன்னிட்டு கோயிலில் மாதா் சங்கம் சாா்பில் வளாகத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டிருந்தது.

மாதா் சங்கத்தினா் பக்தி பாடல்கள் பாடி அம்பாளை மகிழ்வித்தனா். இதையடுத்து கொலு முன்பு முளைபாரி வைத்து, ஸ்ரீமுத்துமாரியம்மன், ஸ்ரீமுத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னா் நவராத்திர கொலுவுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து ஊஞ்சல் உற்சவத்தில் காணப்பட்ட துா்க்கைக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.