ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

செட்டிக்குறிச்சியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

கயத்தாறை அடுத்த செட்டிக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :18 அக்டோபர் 2020, 8:02 pm

DIN

கயத்தாறை அடுத்த செட்டிக்குறிச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

செட்டிக்குறிச்சிப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் அரிகண்ணன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது செட்டிக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து அப்பகுதியில் உள்ள கடையில் திடீரென சோதனையிட்டனா்.

அப்போது அங்கு விற்பனைக்கு வைத்திருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கயத்தாறு போலீஸாா் வழக்குப்பதிந்து, செட்டிக்குறிச்சி கிழக்குத் தெருவைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பேச்சிமுத்து (31) என்பவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.