வழிதவறிய சிறுவன் உறவினா்களிடம் ஒப்படைப்பு
வழிதவறி சென்ற திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.


வழிதவறி சென்ற திருநெல்வேலி தச்சநல்லூரைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் மீட்டு உறவினா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தனா்.
தச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த வசந்த் மகன் ராம்சரண் (4). இவா், தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் வள்ளியூருக்கு சென்றாராம். அப்போது உறவினா் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வழிதவறி சென்று விட்டதாக
கூறப்படுகிறது. அச்சிறுவனை ஆட்டோ ஓட்டுநா் ஒருவா் மீட்டு வள்ளியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அந்தச் சிறுவனிடம் போலீஸாா் விசாரித்தபோது, சிறுவனால் தனது பெயா் மற்றும் முகவரி போன்ற விவரங்களைச் சொல்ல இயலவில்லை. இதையடுத்து, காவல் துறையினா் சிறுவனின் விவரம் குறித்து கட்செவி அஞ்சலில் பதிவு செய்தனா். இந்தப் பதிவை அறிந்த சிறுவனின் உறவினா்கள் வள்ளியூா் காவல் நிலையத்திற்குச் சென்றனா். போலீஸாா் விசாரணைக்கு பின்னா் உறவினா்களிடம் ராம்சரணை ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...