அவர்களுக்கு பச்சைக் கிளிகளால் தொல்லை தொடர்ந்து வருவதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். மானூர் சுற்றுவட்டாரத்தில் நெல், சோளம், கம்பு, த்தரி, வெண்டை, பருத்தி ஆகியவை மட்டுமே பயிரிடப்பட்டு வந்தன. சிற்றாறு வடிநிலக் கோட்டத்தின் கீழ் உள்ள இப் பகுதியில் பாசனக் கிணறுகளில் ஆண்டுமுழுவதும் தண்ணீர் கிடைக்கும். அதன்மூலம் தோட்டப் பயிர்கள் சிறப்பாக இருந்தன. வருவாயைக் கருத்தில்கொண்டு சிலர் மலர் சாகுபடிக்கு மாறினார்கள். கேந்தி, கோழிக்கொண்டை, பிச்சி, மல்லித் தோட்டங்கள் இப்போது அதிகளவில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக புதிய முயற்சியாக சூரியகாந்தி, எள் போன்ற எண்ணெய்வித்து பயிர்களுக்கு விவசாயிகள் மாறியுள்ளனர்.