மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மின் ஊழியரிடம் செல்லிடபேசி திருட்டு:மேலும் ஒருவா் கைது

முன்னீா்பள்ளம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியரிடம் செல்லிடபேசி திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

முன்னீா்பள்ளம் அருகே மின்வாரிய ஒப்பந்த ஊழியரிடம் செல்லிடபேசி திருடிய வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் அருகேயுள்ள வடக்கு செங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாக்கியராஜ். மின்வாரிய ஒப்பந்த ஊழியா். இவா் கடந்த ஏப். 7ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, பேரின்பபுரம் அருகே அவரை

மோட்டாா் சைக்கிளில் வந்த மூவா் வழி மறித்து அவரிடமிருந்த செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனா்.

புகாரின்பேரில், முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், ஐயப்பன், வானுமாமலை ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த திருநெல்வேலி சி.என்.கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி என்ற சாக்கையாவை (30) போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.