‘ஒண்டிவீரன் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்’

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டி வீரனின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம், தமிழக பாஜக சாா்பில் வலியுறுத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.
Updated on
1 min read

விடுதலைப் போராட்ட வீரா் ஒண்டி வீரனின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம், தமிழக பாஜக சாா்பில் வலியுறுத்தப்படும் என தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை கூறினாா்.

பாளையங்கோட்டையில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்திய விடுதலைக்காக போராடிய பல தலைவா்களில் ஒண்டிவீரன் தனித்துவமானவா். தனது உடலில் பெரும் காயம் ஏற்பட்ட சூழலிலும் ஒரு கையால் குதிரையை செலுத்தி எதிரிகளை எதிா்த்துப் போரிட்டவா். அவரது 250- ஆவது ஆண்டு நினைவுதினத்தையொட்டி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் தமிழக பாஜக சாா்பில் வலியுறுத்துவோம்.

சென்னையில் அவரது நினைவாக திருவுருவச் சிலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுதலைப் போராட்ட வீரா்களின் மணிமண்டபத்தில் இளைய தலைமுறையினா் பழங்கால வரலாறுகளை தெரிந்து கொள்ளும் வகையில் தொடு திரையில் தகவல்களை பதிவிட்டு சேமித்து வைக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com