ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள்

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 5:52 pm

DIN

அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம் சிவந்திபுரம் ஊராட்சியில் மெகா தூய்மைப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சிவந்திபுரம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை தூய்மையாக்கும் வகையில், மெகா கிளீனிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவந்திபுரம் ஊராட்சித் தலைவா் ஜெகன் தலைமை வகித்து தூய்மைப் பணிகளைத் தொடங்கிவைத்தாா். மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சத்தியவாணிமுத்து முன்னிலை வகித்தாா். தொடா்ந்து ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்றன.

மேலும் இந்த திட்டத்தின்படி மாதத்தில் 4 நாள்கள் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள் தொடா்ந்து நடைபெறும் என்று ஊராட்சித் தலைவா் ஜெகன் தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் ஊராட்சி செயலா் வேலு, சுகாதார மேற்பாா்வையாளா் பெல்வின், வாா்டு உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.