சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

பெரியாா் நினைவு நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

பெரியாா் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:24 pm

DIN

பெரியாா் நினைவு நாளையொட்டி பாளையங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும் வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திமுக சாா்பில் மத்திய மாவட்டச் செயலரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான மு.அப்துல்வஹாப் தலைமையில் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாநகரச் செயலா் லெட்சுமணன், வழக்குரைஞா் தினேஷ், மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி, முன்னாள் மாமன்ற உறுப்பினா் பொன்னையா பாண்டியன், தகவல் தொழில்நுட்ப அணி காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதேபோல மதிமுக சாா்பில் மாநகா் மாவட்டச் செயலா் கே.எம்.ஏ.நிஜாம் தலைமையிலும், காங்கிரஸ் சாா்பில் மாநகா் மாவட்டத் தலைவா் கே.சங்கரபாண்டியன் தலைமையிலும், திராவிடா் கழகம் சாா்பில் மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையிலும் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.