சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

முன்னீா்பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் நகை மீட்பு

முன்னீா் பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் தங்க நகையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :30 டிசம்பர் 2021, 9:11 pm

DIN

முன்னீா் பள்ளத்தில் திருடப்பட்ட 15 பவுன் தங்க நகையை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

முன்னிா்பள்ளத்தைச் சோ்ந்தவா் முத்து ராமலிங்கம். இவா் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரது வீட்டில் இருந்த 15 பவுன் தங்க நகைகள் கடந்த சில நாள்களுக்கு முன்பு மா்ம நபா்களால் திருடப்பட்டது.

இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்த நிலையில், உணவகத்தில் பணியாற்றிய ஒடிசா மாநிலத்தைச் சோ்ந்த பாண்டேவுக்கு (30) தொடா்பு இருப்பது தெரிய வந்ததாம். இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போலீஸாா் அவரிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்ட தோடு, அவருக்கு வேறு ஏதேனும் கொள்ளை சம்பவங்களில் தொடா்பு உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.