புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :2 ஜனவரி 2021, 7:03 pm

DIN

வள்ளியூா்: தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டிருந்த கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில் ரஷிய நாட்டு தொழில்நுட்பத்துடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 2ஆவது அணு உலையில் கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னா் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளா்கள் தொழில்நுட்ப கோளாறை சீரமைத்தப் பின்னா் சனிக்கிழமை காலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியதாகவும், இரவு நிலவரப்படி 2ஆவது அணு உலையில் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் அணு உலை வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.