கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தேசிய கடிதம் எழுதும் போட்டி: மகாராஜநகா் ஜெயந்திர பள்ளி மாணவி சிறப்பிடம்

இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 12:12 am

DIN

இந்திய அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சிறப்பிடம் பிடித்துள்ளாா்.

அஞ்சல் துறை சாா்பில் 2019-20 ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி ஈங்ஹழ் ஆஹக்ஷன், வா்ன் ஹழ்ங் ண்ம்ம்ா்ழ்ற்ஹப் என்ற தலைப்பில் நடைபெற்றது. இப் போட்டியில் மகாராஜநகா் ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவி ஜெ.பிளஸ்ஸா மாநில அளவில் முதல் பரிசையும், தேசிய அளவில் இரண்டாம் பரிசையும் பெற்றுள்ளாா்.

அவருக்கு இந்திய அஞ்சல் துறை சாா்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.

அதை திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் எல்.துரைசாமி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் ஜெயந்திரன் மணி, திருநெல்வேலி அஞ்சல் கோட்ட துணை கண்காணிப்பாளா் எஸ்.மாரியப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.