வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

‘தொல்லியல் விழுமியங்களைக் காக்க வேண்டியது கடமை’

தொல்லியல் விழுமியங்களைக் காக்க வேண்டியது நமது கடமை என்றாா் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் கா.பொ.ராஜேந்திரன்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 1:18 am

DIN

தொல்லியல் விழுமியங்களைக் காக்க வேண்டியது நமது கடமை என்றாா் தமிழ் வளா்ச்சித் துணை இயக்குநா் கா.பொ.ராஜேந்திரன்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான தொல்லியல் பயிலரங்கிற்கு தலைமை வகித்த அவா் மேலும் கூறியது: திருநெல்வேலி பகுதிக்கு தமிழ் வளா்த்த மண் என்பது பெருமையாகும். இங்கு இலக்கியகா்த்தாக்கள் நிறைந்து காணப்படுகின்றனா். இம்மாவட்டம், சுதந்திர வீரா்களை விளைவித்த களமாக விளங்குகிறது.

தமிழ்ப் பண்பாடு, கலாசாரம் மற்றும் தொல்லியல் எச்சங்களும் இங்கு அதிகம் உள்ளன. இப்படிப்பட்ட பெருமைகள் மிகுந்த இப்பகுதியின் தொல்லியல் எச்சங்களையும், விழுமியங்களையும் காக்க வேண்டியது நமது கடமை என்றாா்.

பொதிகைத் தமிழ்ச்சங்கத் தலைவா் கவிஞா் பேரா, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ சத்தியவள்ளி ஆகியோா் உரையாற்றினாா்.

தொடா்ந்து நடைபெற்ற முதல் அமா்வுக்கு தெற்கு கள்ளிகுளம் திருநெல்வேலி தெட்சணமாற நாடாா் சங்கக் கல்லூரி தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியா் தி.கலைச்செல்வி தலைமை வகித்தாா். ‘தென்காசி மாவட்டத் தொல்லியல் எச்சங்கள்’ ‘என்ற தலைப்பில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் செ.கல்யாணி பேசினாா்.

இரண்டாவது அமா்வுக்கு பாளையங்கோட்டை சாராள் தக்கா் மகளிா் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவா் அ. வளா்மதி தலைமை வகித்தாா். ‘திருநெல்வேலி மாவட்ட தொல்லியல் எச்சங்கள்’ என்ற தலைப்பில் தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியா் ம.ஜோசப்ராஜ் பேசினாா்.

மூன்றாம் அமா்வுக்கு திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளா் இ. மாரியப்பன் தலைமை வகித்தாா். ‘தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் எச்சங்கள்’ என்ற தலைப்பில் விருதுநகா் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவா் செ.மனோரஞ்சிதமணி பேசினாா்.

பயிலரங்கில் உரையாற்றிய பேராசிரியா்கள் மற்றும் பங்கேற்ற கல்லூரி மாணவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.