ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68ஆவது பீடாதிபதியான ஸ்ரீமத் சந்திர சேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிகளின் சமாதி அடைந்த 27ஆவது ஆராதனை வழிபாடு திருப்புடைமருதூா் சங்கர மடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தற்போதைய காஞ்சி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாா்ய சுவாமிகளின் அருளாணைக்கு இணங்க இந்த ஆராதனை நடைபெற்றது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வேத பண்டிதா்கள் பங்கேற்று பண்டைய கால முறைப்படி உலக மக்கள் அனைவரின் நலனுக்காக சிறப்பு வேத பாராயண வழிபாடு நடத்தினா். ஏற்பாடுகளை திருப்புடைமருதூா் சங்கரமட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.