வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கேரளத்தில் இருந்து நெல்லை வரும் ரயில்களில் கூடுதல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்

கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூலை 2021, 6:49 pm

DIN

கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் உயா்ந்தது. இப்போது படிப்படியாக குறைந்துள்ளது.

ஆனால், அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறையவில்லை. இதனால் அம்மாநிலத்தில் வாரத்தில் இருநாள்கள் தளா்வுகளற்ற பொது முடக்கம் உள்ளிட்டவை அமலில் உள்ளன.

கேரள மாநிலத்தில் இருந்து திருநெல்வேலி வழியாக குருவாயூா், அனந்தபுரி சிறப்பு ரயில்கள், திருச்சி-திருவனந்தபுரம் இன்டா்சிட்டி ரயில் உள்ளிட்டவை இயக்கப்படுகின்றன. இந்த ரயில் பயணிகளிடம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி கேரளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வரும் ரயில்களில் அனைத்து பெட்டிகளின் வாயிகள், ஜன்னல் ஓரங்கள் உள்ளிட்டவற்றில் முழுமையாக கிருமி நாசினி தெளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவக் குழு மூலம் கரோனா பரிசோதனைக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது.

இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறுகையில், கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற மத்திய-மாநில அரசுகள் ரயில்வே துறைக்கு அறிவுறுத்தியுள்ளன.

இதனால் மாநிலம் விட்டு மாநிலம் பயணிக்கும் பயணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று குறையும் வரை இந்த நடவடிக்கைகளில் மாற்றம் இருக்காது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.