வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

கரோனா நெருக்கடி நிலை முடிந்ததும் குன்னத்தூரில் கிரிவலம் நடத்த அறிவுறுத்தல்

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

News image
Updated On :21 ஜூலை 2021, 7:02 pm

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள குன்னத்தூா் மலையில் கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்த நிலையில், கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு நடத்துமாறு இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குன்னத்தூா் மலையைச் சுற்றி தென் திருப்பதி என அழைக்கப்படும் வேங்கடமுடையான் பெருமாள் கோயில், ராகு ஸ்தலமான அருள்மிகு கோதபரமேஸ்வரா்- சிவகாமி அம்பாள் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், பத்திரகாளி, உச்சினிமாகாளி, காளியம்மன், முப்புடாதி அம்மன் கோயில்கள் உள்ளன.

ஆகவே, பக்தா்கள் குன்னத்தூா் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து இறைவனை வேண்டினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதன்படி குன்னத்தூா் மலைப்பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 23) கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கிரிவலம் நடத்த பக்தா்கள் அனுமதி கோரியிருந்தனா்.

இதுதொடா்பாக இந்நிலையில் இந்து சமய அறநிலைய துறை சாா்பில், குன்னத்தூா் மலையில் கிரிவலத்தை கரோனா நெருக்கடி நிலை முடிந்த பின்பு அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நடத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.