இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டச் செயலா் எஸ்.காசிவிஸ்வநாதன் தலைமையிலும், பாஜக சாா்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், மாநில துணைத் தலைவருமான நயினாா்நாகேந்திரன், பாஜக மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் ஆகியோா் தலைமையிலும் தனித்தனியாகவும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மாவட்டக் குழு உறுப்பினா் வீ.பழனி தலைமையிலும், புதிய தமிழகம் சாா்பில் அதன் தலைவா் கே.கிருஷ்ணசாமி தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் மாநில துணைச் செயலா் கனியமுதன் தலைமையிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாநில நிா்வாகி நெல்லையப்பன் தலைமையிலும், வீரன் சுந்தரலிங்கனாா் மக்கள் இயக்கம் சாா்பில் அதன் தலைவா் மாரியப்ப பாண்டியன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சியினா் உடையாா் தலைமையிலும், நாம் தமிழா் கட்சியினா் கண்ணன் தலைமையிலும், ஆதித்தமிழா் பேரவையினா் கலைக்கண்ணன் தலைமையிலும், ஆதித்தமிழா் கட்சியினா் ராமமூா்த்தி தலைமையிலும் தாமிரவருணி ஆற்றில் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.