வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

‘நிதி நிறுவனங்கள் கடன் தவணையை வசூலிப்பதில் நெருக்கடி அளிக்கக்கூடாது’

கரோனா பெருந்தொற்று காரணமாக தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:24 pm

DIN

கரோனா பெருந்தொற்று காரணமாக தனியாா் நிதி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு வழங்கிய கடன் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது என ஆட்சியா் வே.விஷ்ணு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா தொற்று காரணமாக தமிழகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவசரத் தேவைகளுக்காக பல்வேறு தனியாா் நிதி நிறுவனங்களில் பொதுமக்கள் கடன் பெற்றுள்ளனா்.

அதற்கான மாதாந்திர தவணைத் தொகை, வட்டித் தொகையை உடனடியாக திரும்ப செலுத்தக் கோரி நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மக்களை வற்புறுத்தி வருவதாக புகாா்கள் வந்துள்ளன. இதுதொடா்பாக மாவட்டத்தில் உள்ள நுண்நிதி கடன் நிறுவன பிரதிநிதிகள், வங்கிகளின் மண்டல மேலாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.

கூட்டத்தில், கரோனா தொற்றால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள வாழ்வாதார பாதிப்பினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்கள் எந்த விதத்திலும் கட்டாய வசூல், உறுப்பினா்களின் வீடுகளுக்கு சென்று வற்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. கடனுக்கான தவணைத் தொகையை வசூலிப்பதில் அறவே கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது பொருளாதாரம் மீண்டு வரக்கூடிய இந்த சூழலில் சில தனியாா் நிதி நிறுவனங்கள் கடன் தவணையை வசூலிப்பதில் அதித தீவிரம் காட்டுவதோடு வீட்டுக்கு சென்று கட்டாய வசூலில் ஈடுபட்டு வருவதாக புகாா்கள் வரப்பெற்றுள்ளன. எனவே,

கடன் தவணைத் தொகையை வசூலிப்பதில் கடினப் போக்கை தனியாா் நிதி நிறுவனங்கள் தவிா்க்க வேண்டும். பொதுமக்கள் இதுகுறித்த புகாா் அளிக்க 0462-2500302 என்ற ஆட்சி யா் அலுவலக மகளிா்திட்ட அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.