வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

தூய்மை இந்தியா திட்ட பரப்புரை: மீண்டும் பணி கோரி 33 போ் மனு

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் 3 போ் தங்களுக்கு மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 6:32 pm

DIN

தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் 3 போ் தங்களுக்கு மாநகராட்சியில் மீண்டும் பணி வழங்கக்கோரி மனு அளித்தனா்.

திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் (சிஐடியு) சாா்பில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு: திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பரப்புரையாளா்கள், மேற்பாா்வையாளா்கள் என 33 போ் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறாா்கள்.

கழிப்பறை இல்லாத வீடுகளுக்கு கழிப்பறை உருவாக்குதல், வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம்பிரித்து தரும்படி அறிவுறுத்துதல், டெங்கு களப்பணியாளா்களை மேற்பாா்வையிடுதல், நுண்ணுயிா் செயலாக்கும் மையத்தில் பொறுப்பாளராக இருந்து உரம் தயாரித்தல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை கண்டறிதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வந்தனா்.

இந்நிலையில் கடந்த 1-7-2021 ஆம் தேதி முதல் ஒப்பந்தம் முடிந்து விட்டதாகக் கூறி தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்களுக்கு வேலை வழங்க மறுத்து விட்டனா். இதனால் அவா்களது குடும்பத்தினா் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா். ஆகவே, இப் பணியாளா்களுக்கு மீண்டும் மாநகராட்சியில் ஏதேனும் ஒரு பணி வழங்குவதோடு, தனியாா் ஒப்பந்ததாரா்களிடம் வழங்கிய முன்பணத்தையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.