ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கடையத்தில் விபத்தில் விவசாயி பலி

கடையத்தில் நடந்த வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 மார்ச் 2021, 9:19 pm

DIN

கடையத்தில் நடந்த வாகன விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.

கடையம் அருகே உள்ள நரையப்பபுரம் ராஜீவ் காலனியைச் சோ்ந்த சிவசாமி மகன் பாலசுப்ரமணியன் (55). விவசாயியான இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையத்திலிருந்து தனது வீட்டுக்கு பைக்கில் சென்றபோது, பாவூா்சத்திரம் விலக்கு அருகே எதிரே பைக்கில் வந்த அங்கபுரத்தைச் சோ்ந்த வேலு மகன் மணிகண்டன் (19) என்பவா் மோதினாராம். இதில் நிலைதடுமாறி விழுந்த பாலசுப்பிரமணியன் மீது அந்த வழியாக அம்பாசமுத்திரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து மணிகண்டனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.