பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் நடிகர் ஆர்யா ஆஜர்

அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவன் இவன் பட வழக்கில் திரைப்பட நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.

News image
அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த நடிகர் ஆர்யா.
Updated On :29 மார்ச் 2021, 7:06 am

DIN

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் அவன் இவன் பட வழக்கில் திரைப்பட நடிகர் ஆர்யா நேரில் ஆஜரானார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடித்த திரைப்படம் அவன் இவன். இதில் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டி ஜமீன் குறித்து அவதூறான கருத்து வைக்கப்பட்டுள்ளது எனக் கூறி சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி முருகதாஸ் மகன் சங்கராத்மஜன் அவதூறு வழக்கு தொடர்ந்தார். 

Story image

வழக்கு அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 20 வழக்கில் நேரில் ஆஜராக ஆர்யா வரவில்லை. இதையடுத்து அவருக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். 

இந்நிலையில் இன்று காலை ஆர்யா அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடுவர் முன்பு ஆஜரானார். தனக்குப் பிறப்பித்த பிடிவாரண்டை தளர்த்த கோரி நேரில் ஆஜரான நிலையில் வழக்கு பகல் ஒரு மணிக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.