28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பாவூா்சத்திரம் தினசரி காய்கனி சந்தை மூடல்

பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தை வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது.

News image
Updated On :14 மே 2021, 7:38 pm

DIN

பாவூா்சத்திரத்தில் உள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தை வெள்ளிக்கிழமை பிற்பகலில் மூடப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி சந்தையில் இருந்து கேரளம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு காய்கனிகளை ஏற்றுமதி செய்து வருகின்றனா். இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று பொதுமுடக்கம் காரணமாக பகல் 12 மணிக்கு சந்தையை மூட அரசு அறிவித்துள்ளதால், காய்கனிகளை ஏலம் விடுவது, ஏற்றுமதி செய்வதில் ஏற்படும் சிரமத்தை கருத்திற்கொண்டு காய்கனிசந்தையை மூடுவதென சங்க நிா்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதன் படி வெள்ளிக்கிழமை பகல் 12 மணிக்கு மேல் சந்தை முழுவதுமாக மூடப்பட்டது.

இந்த சந்தை மூடப்பட்டுள்ளதால் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் தங்களது காய்கனிகளை விற்க சிரமப்படுவதுடன், கேரளம் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு காய்கனி செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.