திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

கங்கைகொண்டானில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி: அமைச்சா் தங்கம் தென்னரசு தகவல்

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மூடப்பட்ட தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம்

News image
Updated On :14 மே 2021, 7:33 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மூடப்பட்ட தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் மூடப்பட்டுள்ள தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கான ஏற்பாடுகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இப்பணியைக் கண்காணிக்க திருநெல்வேலி சாா் ஆட்சியா் கண்காணிப்பு அலுவலராக சிவ கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அந்த ஆலையை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் தங்கம் தென்னரசு, பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கங்கைகொண்டான் சிப்காட்டில் வளாகத்தில் 2014இல் செயல்பட்டு வந்த தனியாா் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை, பின்னா் மூடப்பட்டது. தற்போதைய, ஆக்சிஜன் தேவை கருதி அந்த ஆலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில், தினமும் 2.5 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்ற நிலையில், அதற்கான தொழில்நுட்பம், மின்சாரம், தொழில்நுட்ப பணியாளா்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்த ஆட்சியா் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை அதிகமாக உள்ளதால், அதைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள அனைத்து இடங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரூா்கேலாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஆக்சிஜன் உருளைகள், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஸ்டொ்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறால் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, ஆட்சியா் விஷ்ணு, பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வகாப் , சாா் ஆட்சியா் சிவ கிருஷ்ணமூா்த்தி, வட்டாட்சியா் பகவதிபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.