இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தலைவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
”தேசம் மற்றும் அதன் மக்கள் மீதான தூய அர்ப்பணிப்பே பிரதமர் மோடியின் இலக்கணமாகும். குஜராத் முதல்வராக இருந்தபோது அவர் காட்டிய அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலிருந்து, பிரதமராக அவர் காட்டிய அர்ப்பணிப்புள்ள தலைமை வரை, அவரது வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான சேவைப் பயணமாகவே இருந்துள்ளது.
முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் 8,930 நாள் சாதனையை முறியடித்து, ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை பிரதமர் மோடி இன்று (மார்ச் 22) எட்டியுள்ளார்.
நாட்டின் தலைவராக 8,931 நாள்கள் பொதுப் பதவியில் இருந்த இந்தத் தருணம், இந்தியாவிற்கே முதலிடம் தரும் ஆட்சிமுறை, செயலில் நேர்மை மற்றும் ஒவ்வொரு குடிமகனுக்கும் அயராத சேவை ஆகியவற்றில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக பிரதமர் மோடிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Union Defense Minister Rajnath Singh has tweeted that Prime Minister Narendra Modi has become the longest-serving head of a government in India.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை


