தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்துள்ளார்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று(புதன்கிழமை) மாலை வருகை தந்துள்ளார்.
தில்லியிலிருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு வந்த பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் நாகா்கோவில் ஆயுதப்படை மைதானத்துக்கு வந்தார்.
தொடர்ந்து, வேப்பமூடு சந்திப்பிலிருந்து வடசேரி எம்.ஜி.ஆா். சிலை வரை ஒன்றரை கி.மீ. தொலைவுக்கு சாலைப் பேரணியாகச் சென்று கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு திரட்டுகிறாா்.
இப்பேரணியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொள்கின்றனா்.
பிரதமர் வருகையையொட்டி நாகா்கோவில் நகரம் முழுவதும் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா். மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Summary
Prime Minister Modi Arrives in Nagercoil for election campaign
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு!

தமிழக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

பிரதமர் மோடி, ராகுலுக்கு நன்றி தெரிவித்த விஜய்!

தாமரை எங்கும் மலரும்: பிரதமர் மோடி
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India




