47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

களக்காடு கால்வாய்களில் அமலைச் செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை

களக்காட்டில் உள்ள நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :5 நவம்பர் 2021, 6:30 pm

DIN

களக்காட்டில் உள்ள நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகளை அகற்ற வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வடகிழக்குப் பருவமழைக் காலங்களில் களக்காடு மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் மழைதான் களக்காடு, நான்குனேரி வட்டாரத்தில் விவசாயத்திற்கு பிரதான நீராதாரம். இங்கு பெய்யும் மழையால் பச்சையாற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் பச்சையாறு, நான்குனேரியன் கால்வாய், உப்பாறு வழியாக நான்குனேரி பெரியகுளம், விஜயநாராயணம் குளம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாசனக் குளங்களைச் சென்றடைகிறது. ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன் நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள அமலைச்செடிகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அகற்றுவது வாடிக்கை. ஆனால் நிகழாண்டில் இதுவரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நீா்வரத்துக் கால்வாய்களில் தண்ணீா் செல்லத் தடையாக உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.