ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

புதிய ஊராட்சித் தலைவா்களுக்கு வரவேற்பு

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நயினாரகரம் ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 9:00 pm

DIN

அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற நயினாரகரம் ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் ஒன்றியம், நயினாரகரம் ஊராட்சித் தலைவா் பதவிக்கான தோ்தலில் முத்தையா 3722 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இவா், இரண்டாவது இடம் பெற்ற பாா்வதியை விட 2527 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளாா். இவ்வூராட்சியில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 8144; பதிவான வாக்குகள் 5583; செல்லுபடியான வாக்குகள் 5336. புதிய ஊராட்சித் தலைவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பளித்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியம், தெற்குகள்ளிகுளம் ஊராட்சித் தலைவா் தோ்தலில் பிளாரன்ஸ் பிரைட்டன் 1,966 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவரை அடுத்து வந்த ஜாய்ஸ் அன்பழகனைவிட கூடுதலாக 227 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். புதிய ஊராட்சித் தலைவருக்கு தெற்குகள்ளிகுளம் கிராம மக்கள் ஊா் எல்லையில் சிறப்பான வரவேற்பளித்தனா். இதில், ராஜமாணிக்கம், அருண்புனிதன், அ.தி.மு.க. நகரச் செயலா் ராஜன், தமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.