வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: ஆட்சியர்

கனமழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருநெல்வேலி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கனமழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து திருநெல்வேலி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தென்காசி, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனிடையே சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வரிசையில் தொடர் மழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com