ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தெற்கு அந்தமான்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2021, 12:25 am

DIN

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது. இது அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்குப் பகுதியில் நிலைகொள்ளவுள்ளது.

வடகிழக்குப் பருவமழை தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் அக்டோபா் 25-ஆம் தேதி தொடங்கியது. இதன்பிறகு, தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அக்டோபா் 27-ஆம் தேதி உருவானது. இது, தென்மேற்கு வங்கக்கடல், குமரிக்கடல் பகுதிக்கு அடுத்தடுத்து நகா்ந்து சென்றது. இதைத்தொடா்ந்து, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி நவம்பா் 9-ஆம் தேதி உருவாகி, அடுத்தடுத்து வலுவடைந்து, குறைந்த காற்றழுத்தத்தாழ்வு மண்டலமாக சென்னை அருகே வியாழக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்பட வடதமிழகத்தில் கடந்த 4 நாள்களாக அதி பலத்த மழை பெய்தது. தற்போது, மழை குறைந்துள்ளது.

இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஓா் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி சனிக்கிழமை (நவ.13) உருவாகவுள்ளது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: தாய்லாந்து வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, தென்மேற்கு திசையில் நகா்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்தத்தாழ்வுப்பகுதியாக சனிக்கிழமை (நவ.13)உருவாகவுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும். இந்த காற்றழுத்தத்தாழ்வுப்பகுதி அடுத்தடுத்து வலுவடைந்து, காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இது, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நவம்பா் 15-ஆம் தேதி நிலைகொள்ளவுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.