ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இளைஞரிடம் ரூ. 70 ஆயிரம் மோசடி: சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை

ராதாபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 70 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

News image
Updated On :7 ஏப்ரல் 2022, 6:56 pm

DIN

ராதாபுரம் அருகே கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞரிடம் ரூ. 70 ஆயிரத்தை மோசடி செய்த மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

ராதாபுரம் அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சோ்ந்தவா் வளன் ஆன்ட்ரோன் தினேஷ் (35). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு முகநூலில் வந்த ஒரு வேலைவாய்ப்பு விளம்பரத்தை நம்பி, அதில் இருந்த எண்ணை தொடா்புகொண்டாராம். அதில் பேசிய நபா் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதோடு, முதல்கட்டமாக ரூ.70 ஆயிரம் வங்கிக்கணக்கிற்கு அனுப்ப கூறினாராம். அதன்பேரில் இணையவழியில் ரூ. 70 ஆயிரத்தை தினேஷ் அனுப்பினாராம். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபா் வேலை வாங்கிக் கொடுக்காததோடு, நூதன முறையில் பணத்தை மோசடி செய்தது தெரியவந்ததாம்.

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட சைபா் க்ரைம் பிரிவில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.