பெங்களூரு: நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வதற்காக சுகாதார ஆலோசனைக்குழு அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
நாள்பட்ட நோயாளிகளுக்கு உதவி செய்வது குறித்து திட்டமிடவும், அவா்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை கண்காணிக்கவும், திட்டங்களை செயல்படுத்தவும் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டா் ராஜ்குமாா் கத்ரி தலைமையில் நாள்பட்ட நோய்களுக்கான சுகாதார ஆலோசனைக்குழுவை அமைத்து கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த குழுவில், சுகாதாரத்துறை அதிகாரிகள், பெங்களூரை சோ்ந்த மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனா். நாள்பட்ட நோயாளிகளுக்கான பராமரிப்பு குறித்த சேவைகள் கொள்கையை வகுப்பதற்கு அரசுக்கு இக்குழு ஆலோசனை வழங்கவிருக்கிறது.
நாள்பட்ட நோயாளிகளுக்கு முதல், இரண்டாம், மூன்றாம்நிலைகளில் வழங்க வேண்டிய சிகிச்சைகள், நிலையான வழிமுறைகளை இக்குழு பரிந்துரைக்கும். தொற்றில்லா நோய்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் சேவைகளோடு, நாள்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள், செயல்பாட்டுமுறைகளை இக்குழு ஒருங்கிணைத்து செயல்படும் என்று அரசு பிறப்பித்துள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
Summary
palliative care for Karnataka govt constitutes state-level technical advisory committee for
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக ஆளாத மாநிலங்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது! - கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு

கர்நாடக துணை முதல்வரைச் சந்தித்த வேடன்!

ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம்: கா்நாடக அரசு உத்தரவு
ஐபிஎல் ஆட்டங்கள்: பெங்களூரு மைதானத்துக்கு கா்நாடக அரசு அனுமதி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


